Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன?

download (4)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 2022 தரவுகளின்படி, கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர்.

“ஒருவேளை போர் வெடித்தால், எண்ணெய்க் கிணறுகளைத்தான் முதலில் குறிவைப்பார்கள் எனச் சொல்கிறார்கள். என் தலை மீது இருக்கும் குடும்ப கடனுக்காக, எத்தனைப் போர்கள் வந்தாலும் இந்த வேலையை விட முடியாதே” என்கிறார் இப்ராஹிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

திருநெல்வேலியைச் சேர்ந்த 27 வயதான இப்ராஹிம், மத்திய கிழக்கில் உள்ள சிறிய தீவு நாடான பஹ்ரைனில், ஒரு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இரானின் கடல் எல்லையை ஒட்டி பஹ்ரைன் உள்ளது.

இரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானில் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் முக்கிய தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டது, அதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா நடத்திய தாக்குதல் என மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இஸ்ரேல் மற்றும் இரான், லெபனான் இடையே போர் வெடித்தால், அதே பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளையும் அது பாதிக்கும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த போர் பதற்றம் குறித்து மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கூறுவது என்ன? போர் மூண்டால் இந்தியாவிற்கும் அங்குள்ள இந்தியர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp